Saturday, March 3, 2012

வேளச்சேரி படுகொலைகள் - உதிரிபூக்கள் இறுதி காட்சி


வேளச்சேரி படுகொலைகள் குறித்து

விசாரிக்க சென்ற சமூக செயற்பாட்டாளர்களை

சிலர் விரட்டி விட்ட நிகழ்வை கேள்வி பட்ட போது . . .

உதிரிபூக்கள் படம் தான் நினைவிற்கு வந்தது . . .

அப்படத்தின் இறுதி காட்சியில் . . .

தன்னை கடலை நோக்கி தள்ளிவரும் மக்களை நினைத்து

விஜயன் சொல்வார் . . .

" நான் பண்ணின பாவத்திலே பெரிய பாவம்

உங்களை இப்படி மாற்றியதுதான் . . . "

இந்த ஆட்சியாளர்களும் இப்படிதான் மக்களை

மாற்றி வைத்துள்ளார்கள் . . . !

சமீபத்தில் . .

சென்னை புறநகர் பகுதி ஒன்றில் ஒரு காட்சியை காண நேரிட்டது . . .

அதிகாலை நேரம் . . .

அரைகுறையாய் திறந்திருந்த டாஸ்மாக் பார் . . .

வெளியில் பைக்கில் உட்கார்ந்தவாறு . .

ஒரு காவலர் . .

உள்ளிருக்கும் பார் ஆளிடம் உரக்க சொல்கிறார் . .

" என்ன பிரச்சனைனாலும் என்கிட்டே சொல்லு . .

செல் நம்பர் இருக்குதானே . . ? "

இந்த ஆளுங்களா துப்பாக்கி சண்டை போடுவாங்க . . . ?